சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள் ,
தலை முறை தலைமுறையாக,
கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும் ,
அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம் ,
அவரவர் வாழ்வில் தவறு செஇதிராவிட்டாலும் ,
முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் ,
இப்பிறவி, என்பது உயிரின் பரிணாமத் தில் ஒரு சிறு பகுதியே ,
எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன்வினைகளே காரணம் ,
தவமும் அறமும் இணைந்து அருள் வாழ்வு மூலம் தான்,
இதனை மாற்ற இயலும் .
No comments:
Post a Comment