Wednesday, 31 July 2013

தாய்மையின் சிறப்பு

குழந்தை வயிற்றில் இருக்கும்போது,

 அதன் துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொண்டவள் தாய் ,

 பிறந்த பிறகும் பசி முதற்கொண்டு,

 ஒவ்வொரு துன்பத்தையும் போக்கியவள் தாய் ,

அதனால் துன்பம் என்று வரும் போது ஆழ்மனம்,

 நம்மையும் அறியாமல் தாயை அலைகிறது.


துள்ளிய சமதளச்சீர்மை

முற்பிறவியில் பல கர்ம வினைகளைப் பெற்ற ஆத்மாக்கள் ,

இது போன்ற பெற்றோருக்குப் பிளளைகலாகப் பிறந்து,

 தன்னுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றன , 

அதனால் செயல் விளைவு நீதியில் ,

அவரவர்கள் செயலுக்கு ஏற்ப ஒரு நிலையை இறைவன் அளிக்கிறான் , 

இதையே மகரிஷி அவர்கள் துள்ளிய சமதளச்சீர்மை , 

என்ற வார்த்தையில் குறிப்பிடுவார் .

Tuesday, 30 July 2013

மயக்கமே மனிதனுள் நிலைப்பதால்

இல்லறத்தாரை குடும்பம் , சுற்றம் என்ற பந்தம் மனம் பற்றற்ற நிலைக்கு செல்லவிடாமலெயெ தடுத்து விடுகின்றது , தன ஆன்ம விடுதலையை சிந்திக்கும் ஞானம் மறைந்து , தம் மக்கள் வழியே பிறவி எடுத்து செல்லும் மயக்கமே மனிதனுள் நிலைப்பதால் ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்கி பயிற்ச்சி செய்ய இயலவில்லை ,

Sunday, 21 July 2013

பிறவித் தொடர்ச்சியாக வரும்,

பிறவித் தொடர்ச்சியாக வரும்,

யோகிகள் இதற்க்கு விதி விலக்கு ,

அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே ,

யோகத்தை ஆரம்பித்து விடுவார்கள் .

வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை

வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை ,

கடவுளுக்கு என்று கோயில்கள் இல்லை ,

மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்பு ,

ஏற்படுத்தும் பூசாரிகலும் இல்லை ,

மனிதனே கடவுளை நேரடியாக வணங்கலாம் .

ஆத்மா அனுகூலம்

பச்சை மரத்தில் தீபற்றுவது கடினம் ,

காய்ந்த விறகில் சிறிது நேரம் கழித்து பற்றும் ,

பஞ்சில் மிக எளிதாகப்பற்றும் ,

அதே போன்று  சாதகனின் ,

மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறே ,

ஆத்மா அனுகூலம் கிடைக்கும் காலம் வேறுபடும் .

தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,

தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,

ஆசைகளையும் , சுய நலத்தையும் துறத்தல்,

ஆகிய குறிக்கோளை இணைத்து ,

பரமானந்த நிலையடைதலே ,

நோக்கமாக கொண்டவர்கள் என்பதைக் குறிக்கும் .

நம் வினைப் பதிவுகளை

இறைவன் காலமாக இருக்கிறான் , 

அனைத்தையும் காலத்தில் மலர்த்துகிறான் , 

முக்காலங்களும் இறைநிலையில் உள்ளது ,

கடந்த கால சரித்திரத்தை அறிகிறோம் ,

நிகழ காலம் எதிரில் விரிகிறது,

ஆனால் வருங்காலத்தை இறைவன் ,

மறைத்து வைத்து உள்ளான் ,

அதை தெரிந்து கொண்டாள் நம் வினைப் பதிவுகளை ,

அனுபவிக்க  மறுத்து அடம் பிடிப்போம் .

 

வள்ளுவரும்


வள்ளுவரும் , தவம் செய்து,

 இயற்கையோடு இணைந்து ,

வாழ்ந்தாலே மனித வாழ்வு சிறக்கும் , 

தவம் செய்பவர்கள் ,

குறைந்தால் வறுமை ஓங்கும் .

Saturday, 20 July 2013

பரினாம வளர்ச்சி

இறைநிலையில் அணுவாகப் பரிணமித்து அண்டங்களாகி ,

ஓரறிவு முதல் ஆறறிவாகி , ஆறறிவின் சிறப்பு அறிந்து, 

ஞாலத்தில் வாழ்ந்து தன மூலத்தை உணர்ந்து ,

அதில் அடங்கி விடுவதோடு முடிந்து விடுகின்றது ,

 இதற்க்கு மேல் வளர்ச்சி என்பது இல்லை .

பிரம்மஞானம் என்றால்

பிரம்மஞானம் என்றால்,

 முழுமையை உணர்ந்து ,

அறிவு என்று பொருள் , 

அந்நிலை பெற்ற அறிவு வாழும்,

 காலத்தே வாழ்க்கை சிக்கல்களில் இருந்து ,

தன்னை விடுத்துக்கொண்டு , 

முழுமையை நோக்கிய பயணத்தில்,

 தொடர்ந்து கொண்டே இருக்கும் .

மாற்றம் மட்டுமே நிலையானது

எதிலிருந்து தோன்றியதோ,

 அதை தான் அது சேருகிறது , 

அங்கு பெயரும், உருவமும் மட்டுமே,

அழிந்து விடுகிறதே தவிர ,

அப்பொருள் அழிவது இல்லை , 

கடலிலே கலக்கின்ற நதி,

தன்னுடைய தனித்தன்மையை இழந்து கடலாகிறது , 

அதே போன்று தான் இதுவும் . 


ஆசை வந்தால்

உடலில் ஆசை விழுந்தால் காமூகனாகிரான் ,

பொருளில் ஆசை வந்தால் லோபியாகிறான் ,

வாழ்வில் ஆசை வந்தால் சம்சாரியாகிறான் ,

இறைவன் மேல் ஆசை வந்தால் ஞானி ஆகிறான் .

பற்றற்று இருக்க

எல்லா ஆசைகளையும்,

துறந்து விட வேண்டும்,

 என்பது இதன் பொருள் அல்ல , 

வைக்க வேண்டிய பொருளில்,

ஆசை வைக்க வேண்டும் ,

ஆசையில் அளவு  முறை வேண்டும் , 

என்று தான் மகரிஷி சொல்கிறார் .

பூரனம் குறைவு படாது

ஒரு விளக்கிலிருந்து பல விளக்குகளைப் ,

பற்ற வைத்து சுடர் விடச் செய்யலாம் ,

மற்ற சுடர்களை உண்டாக்கியதால் ,

முதல் விளக்கின் சுடர் குறையவா செய்கிறது ? 

அது போலத்தான் மூலமும் ,

அதிலிருந்து தோன்றிய அண்டங்களும் .

தியானம்

அவர்களால் உண்மையை ,

உள்ளவாறு உணர்ந்து கொள்ள,

 கால அவகாசம் தேவைப்படும் , 

ஏன் , சில பிறவிகள் கூட,

 கடக்க வேண்டியிருக்கும் .

முக்திக்கு வழி

மனிதன் வாழும் காலத்தில்,

 ஆன்மாவைத் தூய்மை செய்து,

 பேரான்மாவோடு ,

இணைப்பதே முக்தியாகும் ,

ஆன்மத் தூய்மையே முக்திக்கு வழியாகும் ,

 இதில் செல்வந்தன், ஏழை, கற்றவன், கல்லாதவன்,

என்ற பாகுபாடு இல்லை .

 


இயற்கையின் ரகசியங்கள்

உலகப் பற்றுகளிலிருந்து மனம் விடுபட்டு,

குணநலப்பேறு அமைந்திருக்கும் உள்ளத்தில் ,

இறைவனின் கருணை பூரனமாக தோன்றி ,

இயற்கையின் ரகசியங்கள் உணர்த்தப் பெரும் .

இறை உணர்வை

கல்வியாளர்கள் முயன்றால் எளிதில் இறையறிவைப் பெறலாம்,

ஆனால் தியானம் இல்லாமல் இறை உணர்வை பெற இயலாது ,

பொருள் துறையில் அதிக நாட்டம் உள்ளவரை ,

அருள் துறையில் நுழைய மனம் வராது .

Friday, 19 July 2013

பொருள் தேடாமல்

பொருள் தேடாமல் பிறர் உழைப்பில் ,

வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் ,

பெற்ற பிள்ளையே ஆயினும் ,

அவமானபடத்தான் வேண்டும் ,

நீங்கள் விடா முயற்சியோடு ,

ஏதாவது ஒரு தொழிலை,

 செய்து பொருளை தேடுங்கள் , 

அதன் பிறகே பிறரிடத்தில் ,

உங்கள் மீது மதிப்பு  ஏற்படும் .

தவத்திற்கு இலக்கணம்

வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதும் ,

பிற உயிர்களுக்குத் துன்பம் ,

விளைவிக்காமல் இருப்பதுவே ,

தவத்திற்கு இலக்கணமாகும் ,

முயற்சி இல்லாதவனுக்கும்

முயற்சி இல்லாதவனுக்கும் 

 தேடுதல் இல்லாதவனுக்கும் ,

அது ஞானமே ஆனாலும் கிட்டாது ,

 வாழ்வில் முன்னேற்றம் என்பது இல்லை .

ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,

ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,

இந்த உடலை எடுத்து வந்திருக்கிறது ,

 ஆனால் மனமானது ,

உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுதும் , 

காரியங்களை ஆற்றிக் கொண்டேயிருக்கும் பொழுதும்,

 உணர்ச்சி நிலைக்கு வருமானால் ,

அதன் விளைவாக தவறுகள் தோன்றி ,

துன்பங்கள் வரத்தான் செய்யும் .

ஆடம்பிறத்தை தவிர்த்து

சேமிக்கும் பணத்தில் ஒரு பகுதியை,

 ஏழை எளியவர்களுக்கும் ,

அனாதை ஆசிரமங்களுக்கும் ,

உணவாகவோ உடையாகவோ ,

நிதியாகவோ அளிக்கலாம் .

விஞ்ஞானம் வளரும் போது

காலம் மாறும் போது ,

சில சாஸ்திரங்கள் மாறும் ,

விஞ்ஞானம் வளரும் போது,

 சோதிடங்கள் பொய்க்கும் என்று 

அதே சாஸ்திரங்கள் சொல்லுகின்றன .


நம் ஆன்ம சக்தி விழிப்புநிலை

நம் ஆன்ம சக்தி விழிப்புநிலை பெரும், 

வாழ்க்கை சிக்கல்களைப் போக்கிக் கொள்ளவும், 

சூழ்நிலைகளை வெற்றி கொள்ளவும் வழி  கிடைக்கும் ,

இறுதியில் மனிதனை வாழ்வின் நோக்கமான ,

தெய்வீகப் பாதைக்கு அலைத்துச் செல்லும் .


உயர்ந்த தொண்டு

இம்மைக்கும் மறுமைக்கும் உதவுகின்ற,

ஆன்மீகத்தொண்டு உயர்ந்த்தென்றாலும்,

 பிற உயிரின் தேவை , ஆற்றுகின்ற காலம்,

 சூனிலையைப் பொறுத்து ,

அனைத்துத் தொண்டும் உயர்ந்ததுதான் .


தியானத்திற்கு துணை நிற்க ,

மனதில் விருப்பமோ , வெறுப்போ, மகிழ்ச்சியோ, 

துன்பமோ, உலகியல் ஆசைகளோ, 

பொறாமை நினைவுகளோ இன்றித்,

 துய்மையான மனத்துடன், 

தியானத்திற்கு துணை நிற்க ,

குருவையும் இறைவனையும் வேண்டித்,

தியானத்தை துவங்க வேண்டும் .

புண்ணியம்

ஒரு பெரிய கோடீஸ்வரர் இருக்கிறார் ,

அவருக்கு ஒரு குழந்தை ,பிறக்கிறது 

அது பிறந்தவுடன் கோடீஸ்வரன் ஆகிறது!!

அந்த ஆன்மா அதற்கான புண்ணியத்தை ,

முற்பிறவியில் உழைத்து சேமித்து வைத்திருக்கிறது .


சிறு வயதிலேயே இறையருளைப்

பல பிறவிகளில் ஆன்மீகத் தேடுதலில்.

 இடைவிடாது முயற்ச்சித்தவர்கள்,

மறுபிறவியில் அதன் தொடர்சியாக,

 சிறு வயதிலேயே,

இறையருளைப் பெற்று விடுகிறார்கள் , 

மற்றவர்கள் அதை ,

உழைத்து சம்பாதிக்க வேண்டும் .

Thursday, 18 July 2013

கடவுளிடம்

கடவுளிடம்  அன்பு வையுங்கள் ,

ஆசை வைக்காதீர்கள் .

அன்பு வாழ வைக்கும் ,

ஆசை வாழ வைக்காது .

நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும்

நல்லார் இணக்கமும் ,

அடியார்களோடு உறவாடுதலும்,

தெய்வத்தை உணரவேண்டும் என்ற ஆர்வமும் ,

இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள் .

முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கெளரவம் ,

முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கெளரவம் ,

கடவுளுக்கு செய்யப்படும் மரியாதையாகும் ,

வயோதிகர்களுக்கு கண்ணியமளிக்கும்,

 ஒவ்வொரு இளைனருக்கும் ,

அவர்களது முதுமைப் பருவத்தில் மரியாதை ,

செய்பவர்களைக் கடவுள் நியமிக்கிறார் .

பகவான் புத்தர்

பகவான் புத்தர் உன் பாவங்களை கழுவிட மாட்டார் ,

உன்னைப் பாவங்களிலிருந்து விடுவிக்க மாட்டார்,

உனக்குப் பதிலாக தாம் வந்து பிணையாக நிற்க மாட்டார் ,

நாம் கடை தேருவதற்குரிய மார்க்கத்தைத் தான் காட்டியிருக்கிறார் .

உடலை அடக்கி , நாவை அடக்கி

உடலை அடக்கி , நாவை அடக்கி 

மனதையும் அடக்கியுள்ளஞானிகளே ,

உண்மையான நல்லடக்கம் உள்ளவர்கள் .


தெய்வத்தின் விருப்பத்திற்க்கு,

தெய்வத்தின் விருப்பத்திற்க்கு,

 எதிராக எந்த ஒரு மனித ,

சக்தியும் நிற்க முடியாது .

சொர்க்கத்தையும் நரகத்தையும் ,

சொர்க்கத்தையும் நரகத்தையும் ,

பூமியிலெ நாம் சுவைத்துப் பார்க்கவே ,

இறைவன் பெண்ணை படைத்தான் .

மனத் தூய்மை

மனத் தூய்மையால் மட்டும்தான் ,

மனிதன் இறைவனின் ,

அன்புக்கு பாத்திரமாக முடியும்

அனுபவத்தால்

அனுபவத்தால் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றை ,

ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் அரியச் செய்ய முடியாது .

ஞானம்

ஞானம் வரும் போது மனிதர்கள் ,

எதையும் வெறுப்பதில்லை ,

அனைத்தையும் நேசிப்பதே ஞானம் .

நேர்மையில் நம்பிக்கை இல்லை

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால்,

 நீங்கள் நேர்மையற்ற முறையில்,

 சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள் ,

பிறகு உண்மை புரியும் .

வினைப்பதிவுகள் தீரும்

வினைப்பதிவுகள் தீரும் காலத்தில் துன்பம் தோன்றும், 

அதை அனுபவித்துதான் தீர்க்க முடியும் ,

ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு,

 இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும்,

அதற்க்கு வேறு மாற்று வழியில்லை .

இன்பம் துன்பம்

உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி ,

அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாக்ச் செலவாகும் ,

அந்த செலவு , உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான ,

நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது ,

உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு ,

தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது ,

உடலைக் கருவியாகக் கொண்டு புலன் வழியே தன் ,

அலைகளால் உயிரே செலவாகி இன்ப ,துன்பத்தை உணர்கிறது .

Wednesday, 17 July 2013

கடவுள் என்பது

கடவுள் என்பது உண்மையிலேயே,

 கற்பனையாக இருந்தாலும் ,

மனிதன் மனிதனாக வாழக்,

 கடவுளை நாம் சிருஷ்டித்தே தீரவேண்டும் .

கடவுளைத் தேடிக்

மனிதன் தன்  மனதைத் தவிர,

 வேறு எல்லா இடங்களிலும் ,

கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான் .

கடவுளே இந்த ஜகத்தில்

கடவுளே இந்த ஜகத்தில்,

 எங்கும் பரந்த மகாசக்தியாக,

 இருக்கிறார் என்பதை உணர்ந்து,

 மாதரிடம் அந்த மகாசக்தியின்,

 விளக்கத்தைக் காண்பவனே,

 உண்மையான சாந்தன் .

ஞானிகளுடைய போதனையாகும் .

தனக்கென்பது ஒன்றும்மில்லை என்பதே ,

எல்லா மதங்களின் ,

ஞானிகளுடைய போதனையாகும் .

மனிதன் கடவுளின் குழந்தை ஆகும் ,

மனிதன் கடவுளின் குழந்தை ஆகும் ,

அழியக்கூடிய உலகம் மற்றும் , 

உடலுடன் தன்னை அடையாளம் காணும்போது ,

அவன் இறக்கக் கூடியவனாக இருக்கிறான் .

கடவுளின் வீட்டை நோக்கி

கடவுளின் வீட்டை நோக்கி,

 நான் கால்களை நீட்டிக் கொண்டிருப்பது,

 அவமரியாதைக் காட்டுவதாக நீ நினைத்தால்,

 கடவுள் இல்லாத இதர திசை ஒன்றை நோக்கி ,

உன் கால்களைத் திருப்பிக் கொள் .

கடவுள் கல்லாக இருந்தால்

கடவுள் கல்லாக இருந்தால்,

நான் ஒரு மலையை வணங்குவேன் ,

யார் என்னை கடவுள்

யார் என்னை கடவுள் என்று கூறுகின்றனரோ,

 அவர்கள் குறைகூறத் தக்கவர்களாகும்,

மற்றும் அளிக்கப்படுவதற்கு உரியவர்களாகும்,

 நான் ஆண்டவனின் ஊழியனே .

Tuesday, 16 July 2013

கடவுள் அன்பாக உள்ளார் ,

கடவுள் அன்பாக உள்ளார் ,

அன்புடன் வாழ்பவன் ,

கடவுளிடம் வாழ்பவன்,

கடவுள் அவனிடம் வாழ்வார் .

கடவுள் உன் குலத்தையும் ,

கடவுள் உன் குலத்தையும் , 

ஜாதியையும் கேட்கமாட்டார் ,

உலகத்தில் யாது செய்தாய் ,

என்று மட்டுமே கேட்பார் .

ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள்,

ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள்,

சமாதானத்தின் காவலர்கள் , 

ஆன்மிகம் எல்லோரையும் வாழவைக்கும் .

கடவுள் கற்பகமரத்தைப் போன்றவர் ,

கடவுள் கற்பகமரத்தைப் போன்றவர் ,

நீ அவரிடம் வேண்டுவது உனக்குக் கிடைக்கும் ,

ஒவ்வொருவரும் தான் வேண்டுவதைப் பெறலாம் .

இறைவனை வெளியே தேடுதல் அறியாமை ,

இறைவனை வெளியே தேடுதல் அறியாமை ,

தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு .

கடவுளது கை வன்மைக்குப் பணிந்து

கடவுளது கை வன்மைக்குப் பணிந்து,

 உங்களைத் தாழ்த்துங்கள் , 

குறித்த காலத்தில்,

அவர் உங்களை உயர்த்துவார் .

Monday, 15 July 2013

நீங்கள் நினைத்தால் மனதை உயர்த்தவும் முடியும்

நீங்கள் நினைத்தால் மனதை உயர்த்தவும் முடியும் ,

தாழ்த்தவும் முடியும் ,ஞானம், வைராக்கியம், பக்தி ,

இவை மனதை மேம்படுத்தும் ,

மனதில் தான் பந்தம் இருக்கிறது ,

முக்தியும் இருக்கிறது ,

எல்லாம் மனதை பொறுத்தது .

உலகம் அனைத்தும் ஆன்மாவே ,

உலகம் அனைத்தும் ஆன்மாவே ,

ஆன்மாவைத் தவிர எதுவும் இல்லை ,

ஆன்மாவிற்கு உபாதிகள் எதுவும் இல்லை ,

அது வர்ணிக்க முடியாதது ,

பகுக்க முடியாதது ,

குணங்கள் அற்றது ,

பரிசுத்தமானது ,

வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாதது .


மன அமைதியை அகங்காரம் அழிக்கிறது ,

மன அமைதியை அகங்காரம் அழிக்கிறது , 

அகங்கார உணர்ச்சி இருக்கும் வரையிலும் ,

மனிதன் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் ,

அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும் ,

ஆகவே அகங்காரத்தைத் தவிர்த்து வாழ்வது தான்,

 மிகவும் சிறந்த நெறியாகும் .

Saturday, 13 July 2013

ஒரு கடவுள் , விதி, மூலப்பொருள் ,

ஒரு கடவுள் , விதி, மூலப்பொருள் , 

மிகவும் தொலைவிலுள்ள,

 ஒரு தெய்வீக சக்தி ஆகிய ,

இவற்றையே எல்லாப் படைப்புகளும் ,

சுற்றிவருகின்றன .

ஒரு தெய்வீகத்தன்மை

நம்முடைய முடிவுகளைத்,

 தீர்மானிக்க ஒரு தெய்வீகத்தன்மை இருக்கிறது , 

அதுபற்றி அலட்சியமாகக் கூற,

நம்மால் எப்படி முடியும் .

மனிதன் அடுத்தநாள் உயிர்ரோடு இருப்பான்

மனிதன் அடுத்தநாள் உயிர்ரோடு இருப்பான் என்று,

 கடவுள் சொல்வார் ,

என்கின்ற அளவுக்கு நல்லவிதமாக ,

கடவுளை பற்றி நினைப்பதில்லை .

Thursday, 11 July 2013

பிறப்பிற்கு முன்னும் , இறப்பிற்கு பின்னும்,

பிறப்பிற்கு முன்னும் , இறப்பிற்கு பின்னும்,

 உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால் ,

உலக வாழ்க்கையில் நாம் உருவாக்கிக் கொள்ளும்,

 கருத்துக்கள் எல்லாம் கனவில் நடந்த நிகழ்ச்சிகள்,

 போல வலுவற்றுப் போகும் .

எல்லோரும் பிறந்தோம் , வாழ்கிறோம், இறப்போம்,

நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை , 

எல்லோரும் பிறந்தோம் , வாழ்கிறோம், இறப்போம்,

இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் 

என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன .

தெய்வநிலை அறிந்து

தெய்வநிலை அறிந்து அந்தத் தெளிவிலே ,

வாழ்ககையை அமைத்துக் ,

கொள்வது தான் ஆன்மீகம் .

தலை முறை தலைமுறையாக,

சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள் , 

தலை முறை  தலைமுறையாக,

 கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும் , 

அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம் , 

அவரவர் வாழ்வில் தவறு செஇதிராவிட்டாலும் ,

முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் , 

இப்பிறவி, என்பது உயிரின் பரிணாமத் தில் ஒரு சிறு பகுதியே , 

எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன்வினைகளே காரணம் , 

தவமும் அறமும் இணைந்து அருள் வாழ்வு மூலம் தான்,

 இதனை மாற்ற இயலும் .

பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு ,

ஒருவன் சிறுது பொருள் வைத்திருந்தாள்,

 மற்றவன் அதை பறிக்க நினைக்கிறான் ,

 தன சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான் , 

இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே , 

பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு , 

போருக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே,

 பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது .

நியாயமாக வாழ்ந்தவர்களை,

நியாயமாக வாழ்ந்தவர்களை,

 எளிய முறையில் இறக்கக்,

கடவுள் வழிசெய்கிறார் .


இந்திரனை சந்திரனை ,

இந்திரனை சந்திரனை ,

இளையாலே மறைப்பாள் ,

எம தருமராசனைக்,

 கையாலே மறைப்பால் .

 

எங்கும் மடமாய் இருக்கிறது

எங்கும் மடமாய் இருக்கிறது ,

 இருக்கத்தான் இடமில்லை

ஆலயம் இடித்து

ஆலயம் இடித்து , 

அன்ன தானம் பண்ணப் போகிறான் .

ஆமை புகுந்து வீடும்

ஆமை புகுந்து வீடும் ,

அமினா நுழைந்த வீடும்,

 உருப்படாது .

ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் ,

ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் ,

அப்பனையும் ஆத்தாளையும் கொள்ளுமே ஒழிய ,

பஞ்சாங்கம் சொன்னவனை என்ன செய்யும் .

அரியும் சிவனும் ஒன்னு ,

அரியும் சிவனும் ஒன்னு , 

அறியாதவன் வாயிலே மண்ணு .

Wednesday, 10 July 2013

பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு குறைவா ?

பெருமாள் நினைத்தால் வாழ்வுக்கு குறைவா?

பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு குறைவா ?

புல்லாய் முளைத்தாலும் போதும் .

பெருமாள் செல்லும் வழியில்,

புல்லாய் முளைத்தாலும் போதும் .

பெருமாள் இருக்கிற

பெருமாள் இருக்கிற ,

வரையில் திருநாள் உண்டு .

சொக்கநாதர் கோயிலுக்குப்

சொக்கநாதர் கோயிலுக்குப்,

 புல்லுக் கட்டு கட்டினார் போல,

 சொப்பனங் கண்ட அரிசி,

 சோற்றுக்கு ஆகுமா ?

வைகுண்டத்திக்குப் போகிறவனுக்கு ,

வைகுண்டத்திக்குப் போகிறவனுக்கு ,

வழிகாட்டிக் கொடுக்க வேண்டுமா ?

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போயும்,

 வயிற்று வழி தீரவில்லை .

மனிதனின் உத்தமமான செயல்

கடவுளை நேர்மையானவராக ஆக்கியது ,

மனிதனின் உத்தமமான செயல் .

அடிப்படையில் பார்த்தால்

அடிப்படையில் பார்த்தால் ,

கடவுள் நம்மை உயர்த்துகின்ற ,

தந்தையன்றி வேறொருவர் அல்லர் .

கடவுளின் பரிசுகள்

கடவுளின் பரிசுகள் ,

மனிதனின் பரிசுகளை ,

வெட்கமுறச் செய்தன .

தன்னுடைய இருப்பை நீருபிக்கும்

தன்னுடைய இருப்பை நீருபிக்கும் பணியை,

நாம் செய்யும் படியாக செய்த கடவுள்,

 ஒரு உருவமாகத்தானிருக்க வேண்டும் .

திருவோண நட்சத்திரம் மகாவிஷ்ணுவுக்கு உரியது ,

குளிர்ச்சி மிகுந்த திருவோண  நட்சத்திரம் ,

மகாவிஷ்ணுவுக்கு உரியது , 

எனவே விஷ்ணுவுக்கு வெப்பம் தரக்கூடிய ,

துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது .

சிவபெருமானுக்கு உரியது ,

வானசாஸ்திறபடி திருவாதிரை,

 எரி நட்சத்திரம் என்றும் , 

 திருவாதிரை நட்சத்திரம் நெருப்பு வடிவமான ,

சிவபெருமானுக்கு உரியது , 

அதன் காரணமாகவே ஈசனுக்கு ,

குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ,

குளிர்ச்சி மிகுந்த வில்வ இலையால்,

 அர்ச்சனை செய்யபடுகிறது .



 

ஐராவதம் என்ற வெள்ளை யானை

ஐராவதம் என்ற வெள்ளை  யானை,

பூஜித்த திருத்தலம் திருவானைக்காவல் .

இந்திரன் பூஜித்த

இந்திரன் பூஜித்த திருத்தலம்,

 கண்ணார் கோவில் .

திருமால் ஈசனை பூஜித்த

சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம் பெரும் பொருட்டு,

 திருமால் ஈசனை பூஜித்த  இடம் திருவீழிமலை .

மனியாற்றங்கரையில் சிவபுஜை

சூரசம்ஹாரத்தின் பொருட்டு,

 முருகப்பெருமான் திருச்செந்த்தூரை,

 நோக்கி செல்லும் வழியில்,

 மனியாற்றங்கரையில்,

 சிவபுஜை செய்த இடம்,

 திருச்சேய் நல்லூர் .

தண்ணீரையே சிவலிங்கமாக

தண்ணீரையே சிவலிங்கமாக திரட்டி,

 அம்பாள் பூஜித்த திருத்தலம்,

 திருவானைக்காவல் .

விநாயகர் சிவபுஜை செய்த

விநாயகர் சிவபுஜை செய்த திருத்தலம் ,

திருச்செங்காட்டான்குடி .

Tuesday, 9 July 2013

இதையே மனிதர் விதி அல்லது அதிஷ்ட்டம் என்கிறார்கள்

உனக்கு இறைவன் ஆணை வரும் போது ,

அதை நிறைவேற்றுவதில் மட்டும் கருத்தாயிரு , 

எஞ்சியிருப்பது அவனது சித்தமும் , 

ஒழுக்கமைப்பும் மட்டுமே , 

இதையே மனிதர் விதி அல்லது அதிஷ்ட்டம் என்கிறார்கள் .

பக்தியின் மூலம் ,

பக்தியின் மூலம் ,

மனம் தூய்மை பெறுகிறது , 

இதனால் நல்ஞானம் , 

நல்லொழுக்கம் , 

தாமே அமைகின்றது .

எல்லாம் விதி வசம்

கடமையை செய்யாமல் ,

எல்லாம் விதி வசம் என்று சொல்வது,

 சோம்பேறிகளின் வீண் பேச்சு .

முறை தவறாத வழிகாட்டி .

எது சரி , எது தவறு, 

என்பதை நிர்ணயிப்பதற்கு,

 வேதங்களே,

முறை தவறாத  வழிகாட்டி .

உலகில் ஒரு துளி சுகம்

உலகில் ஒரு துளி சுகம்  பெற,

 ஒன்பது துளி துக்கம் அனுபவிக்க வேண்டி வரும் .

முன் ஜன்மங்களின்

முன் ஜன்மங்களின் எண்ணங்கள்,

 கர்ம வினைகள் ,

இவற்றின் பலனே இந்த ஜன்மம் .,

மரணம் என்பது

மரணம் என்பது ஆன்மாவின் முடிவல்ல , 

உடுத்தும் துணியை போன்றது .

துறவு என்ற வேஷம்

உள்ளத்தில் எரியும் , 

ஆசைகள் இருப்பின்,

 துறவு என்ற வேஷம் , 

ஒரு பயனும் இல்லை .

கடைசியில் தனிமை வாழ்க்கைதான்

எந்த ஒரு செயலை ,

நீ செய்துக்கொண்டு இருந்தாலும் , 

கடைசியில் தனிமை வாழ்க்கைதான்,

 என்ற நிலை உள்ளத்தில் இருக்க வேண்டும் .

வாழ்க்கை ஒரு கனவு போன்றது .

வாழ்க்கை ஒரு கனவு போன்றது . 

தூங்கி விழித்ததும் ஒன்றுமில்லை .

அவர் தெய்வம் .

விருந்தினர் என்பவர்,

வழிபாட்டிற்கு உரியவர் , 

அந்த நேரத்தில்,

 அவர் தெய்வம் .

அறியாமை , ஆசை

அறியாமை , ஆசை போன்றவற்றின்,

 வசப்பட்டு நாம் ,

செய்கின்ற ஒவ்வொரு செயலும்,

 நிலையாக இருக்காது .

யார் அடங்காத மனதை

யார் அடங்காத மனதை உடையவனாக,

 தூய்மை இல்லாதவனாக இருக்கிறானோ ,

அவன் இறைநிலையை அடையமாட்டான் .

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

காலையில் தவறு செய்தால்,

மாலையில் துன்பம் வரும்,

 என்பது நேரிடையான பொருள் , 

செயலுக்கு தானாகவே விளைவு வரும் , 

அது உடனடியாகவும் இருக்கலாம்,

 தாமதித்துப் பத்து வருடங்கள் கழித்தும் வரலாம்,

அறம் தத்துவஞானம் இவை எந்த அளவு ஓங்குகின்றனவோ

அறம் தத்துவஞானம் இவை,

 எந்த அளவு ஓங்குகின்றனவோ , 

அந்த அளவு சமுதாயம் பண்பாட்டில் உயரும் , 

மக்கள் சீரும் சிறப்பும் பெற்று,

 இனிது வாழ்வார்கள்,

ஆஸ்தி என்பது பொருள்

ஆஸ்தி என்பது பொருள்,

தன்னை அறிந்த இன்பமுற்று ,

அதன் மூலம் இறைவனை,

 அறியாமல் வேறுபட்டு நின்று , 

பொருட்கள் மூலம் இறைவனை,

 பாவிப்பது ஆஸ்திகம் , 

இது மூட நம்பிக்கையில் ,

உள்ள மயக்கநிலையைக் குறிக்கும்.

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன்,

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன், 

அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன் ,

அந்தத் திருத்தம் தான் ,

விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது.

கண்களைப் பார்த்தாலே போதுமானது,

குருவின் கால்களைத் தொட்டு ,

வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும் ,

 நாம் தூய்மை பெற்றுவிடலாம்,

 என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது, 

குருவின் ஆசியைப் பெற ,

அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது,

மத வெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும் ,

மது வெறி ஜீரணமாகும் வரை இருக்கும் , 

காமவெறி விந்து உற்பத்தி குறையும் வரை இருக்கும் ,

மத வெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும் , 

புகழ் மற்றும் பணவெறி உடல் வலிவு உள்ளவரை நீடிக்கும், 


ஆன்மாவின் பலமாகும் .

தர்மம் செய்வதும் , 

பிறர் துன்பம் கண்டு இறங்குவதும்,

 தான் மனிதனின் இயல்பாகும் .

 இது பலவீனம்  அல்ல, 

ஆன்மாவின் பலமாகும் .

கொள்கையில் நம்பிக்கை

உங்களுக்கு இந்த கொள்கையில் நம்பிக்கை ,

இல்லை என்று சொல்கிறீர்கள் , 

அது உங்கள்  மனோநிலை , 

உங்களை வற்புறுத்தி இதனை நம்பும்படி,

 ஒருவர் அடுத்தடுத்துக் கூறினால் ,

அவர் உணர்ச்சி வயப்பட்டவறேயாவார் , 

அவர் சொல்லை நீங்கள் ஏற்று ,

உங்கள் பொன்னான காலத்தை ,

வீணாக்க வேண்டாம் .

கடவுளை வணங்கும்போது

கடவுளை வணங்கும்போது ,

கருத்தினை உற்றுப்பார் ,

நீ கடவுளாய் ,

கருத்தே நிற்கும் ,

காட்சியைக் காண்பாய் .

விதைத்தவை தான் முளைக்கும் .

பற்பல விதைகளைக் கலந்து விதைத்தாலும், 

விதைத்தவை தான் முளைக்கும் .

மாதர் மண் , கணவன் விதை ,

மாதர் மண் , கணவன் விதை ,

 மண்ணும் விதையும் கூடி ,

மக்கள் உயிர்கள் தோன்றுகின்றன .

கணவனே பிள்ளையாகிறான்

கணவனே பிள்ளையாகிறான் ,

கணவன் இரு வகைத்து மனம் புரிந்தவன், 

கருக்கொளச் செய்தவன் ,

மற்றொருவன் என்று,

பொய்யால் தேடிய புண்ணியம்

பொய்யால் தேடிய புண்ணியம் யாவும்,

 அவன் வளர்க்கும் நாய்க்கு சேரும் ,

கட்டத துணியின்றி, 

வழியிழந்து மொட்டையாண்டியாய்ப் ,

பசித்துத் தவித்துத் தன பகைவன்,

 வாயிலில் நின்று பிச்சை கேட்க நேரும் .

முன்னோர்களுக்கு செய்யும் காரியம்

தேவர்களுக்கு உணவு படைத்தல் ,

முதலானவற்றை விட ,

முன்னோர்களுக்கு செய்யும்,

 காரியம் முதன்மையானது .

யாகம், யகஞம் ஆக்கிய சாதனைகள்

யாகம், யகஞம்  ஆக்கிய சாதனைகள்,

 வழங்கும் வல்லமைகள் அழிவான , 

ஆனால் ஓம் மந்திரம் தரும் பயன்,

 அழிவற்றது என்கிறது வேதம் .

ஓம் , பரம்பொருளின் வடிவம்,

ஓம் , பரம்பொருளின் வடிவம், 

மூச்சடக்கி தியாநிப்பதைவிட ,

இதை உச்சரிப்பது மேலானது .

அன்னை பக்தியால் இம்மை இன்பம்,

அன்னை பக்தியால் இம்மை இன்பம், 

தந்தை பக்தியால் மறுமை இன்பம் .

குரு , முனிவர், மருத்துவர்,

குரு , முனிவர், மருத்துவர், 

புரோகிதர், ஜோதிடர், மகான்கள்,

 இவர்களிடம் குற்றம் கானக்கூடாது .

உடனடியாக பலன்

தெய்வங்களின் அனுக்கிரகம் வேண்டி பூஜிப்பதைவிட ,

யாகம் செய்வது உடனடியாக பலன் தருகிறது .

ஆசையை வெறுத்தல்,

மந்திர ஜபம் , பூஜை, குருபக்தி, 

ஆசையை வெறுத்தல், 

கடன் பெறாது இருத்தல்,

 மனிதனின் கவலையை ,

போக்கும் மருந்தாகும் .

திருப்தி செய்ய வேண்டும் .

வேதத்தினால்---- ரிஷிகளையும் ,

ஓமத்தினால் ----தேவர்களையும் ,

சிரார்த்தத்தினால் ---பிதுர்க்களையும் ,

திருப்தி செய்ய வேண்டும் .

உலகம் தெய்வத்திடம் அடக்கம் ,

உலகம் தெய்வத்திடம் அடக்கம் ,

 தெய்வம் மந்திரத்திடம் அடக்கம் ,

மந்திரம் வேதத்தினுள் அடக்கம் , 

சாஸ்திரம் தர்மத்தினுள் அடக்கம் ,

தர்மம் தெய்வத்தைக் காண வழி  வகுக்கிறது ,


தொட்டுக் கெட்டவன் பத்மா சூரன் ,

தொட்டுக் கெட்டவன் பத்மா சூரன் ,

தொடாமல் கெட்டவன் ராவணன், 

சொல்லாமல் கெட்டவன் அரிச்சந்திரன் .

நீ செய்த பாவங்களை

நீ செய்த நன்மைகளை ,

எண்ணி வாழ்வதை விட ,

நீ செய்த பாவங்களை,

மட்டும் எண்ணி திருந்தி ,

வாழ்வதே நல்லது .



மன்னாசைக்கு------மகாபாரதம் .

பெண்ணாசைக்கு ---இராமாயணம் ,

மன்னாசைக்கு------மகாபாரதம் .

பொன்னாசைக்கு ---சிலப்பதிகாரம் . 

இவை மூன்றும் மனிதனுக்கு தேவை ,

சங்கடங்கள் நேராது .

சத்தியத்தை கடைபிடித்தால் ,

சங்கடங்கள் நேராது .

தப்பு செய்தவன்

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் ,

தப்பு செய்தவன் தண்டனை  அனுபவிப்பான் .

சத்தியம் தவறாதே .

பத்தியம் தவறினாலும் , 

சத்தியம் தவறாதே .

தோஷம் நீக்கும் பெருமாள்

ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் கோவில் ,

நாங்க நல்லூரில் அமைந்துள்ளது , ,

இங்கு மூலவர் பிரகாரத்தில் ராகு, ,

கேது கிரகங்களுக்கு இடையே ,

ஏனைய ஏழு கிரகங்களும் இருக்கின்றன ,

இப்படி இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும் ,

அவ்வாறு தோஷம் இருப்பவர்கள்,

இங்கு வந்து பரிகாரம் செய்தால் ,

தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம் .

Sunday, 7 July 2013

இலக்குமியின் அருள்

அன்றாட வாழ்க்கயில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் ,

இன்றோடு விலக வேண்டும்,

 என்று சொன்னால் ,

இலக்குமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும் .

கடன் பிரச்சினை தீர

கடன் பிரச்சினை தீர அரளி பூ ,,

செல்வா நிலை உயர தாமரை பூ ,

இறைவனுக்கு அணிவிக்க வேண்டும் .

தொழிலில் புதிய மாற்றம் ,

தொழிலில் புதிய மாற்றம் , 

இடமாற்றம்மாற்றம் ,

செய்ய வேண்டுமெனில் ,

கடவுளுக்கு சம்பங்கிப் பூ சாற்ற வேண்டும் .

மல்லிகை பூ

 மனக்கலக்கம் மாறி,

மன அமைதி பெற வேண்டுமானால்,

கடவுளுக்கு மல்லிகை பூ சார்த்த வேண்டும் .

கோவில்களில் தீர்த்தம்

கோவில்களில் தீர்த்தம்,

 வாங்கும் பொழுது , 

இடது கை மேல் வலது கையை வைத்து,

தீர்த்தம் வாங்க வேண்டும் .

போராட்டமே ?

சித்திரையில் பிறந்த ஆண் ,

வாழ்க்கையில் ,

உயிர் உள்ள வரை போராட்டமே ?

சித்திரையில் ஆண் பிள்ளை

சித்திரையில் ஆண்  பிள்ளை பிறந்தால் ,

தந்தையின் முன்னேற்றத்துக்கு தடை,

 ஏற்ப்படும் இது உறுதி

தன லாபம்

அரண்மனை போன்ற தோற்றம்,

 ஒருவர் கனவில் வந்தால் ,

மிகுந்த யோகம் . 

திடீரென எதிர்பாராத தன லாபம்

 , உறவினர் வகையில் பெரும் சொத்து வரலாம் , 

வீடு கட்ட பணம் கிடைக்கும் .

வெற்றி கிடைக்க போகிறது

வயலில் அறுவடை செய்வது போல் கனவு கண்டாள்; 

எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்க போகிறது,

 என்று அர்த்தம் .தொழிலில் லாபம் அதிகரிக்கும் .

ஐஸ்வர்யங்கள்

தண்ணீர் மற்றும் நீர் நிலைகள் கனவில் வந்தால் ,

ஐஸ்வர்யங்கள் பெருகும் என்று கருதலாம் .

மேலதிகாரிகளுடன் விரோதங்கள்

உப்பு கனவில் வந்தால் ,

பிறரிடம் நம்பி ஒப்படைத்த,

பொறுப்பு மீண்டும் ,

உங்களிடமே வந்து சேரும் 

மேலதிகாரிகளுடன்,

விரோதங்கள் வரக் கூடிய ,

வாய்ப்பு ஏற்ப்படலாம் .

ஆபரணங்கள்

ஆபரணங்கள் கனவில் வந்தால் ,

உத்தியோகத்தில் உயர்வு கிட்டும் ,

வாகன யோகம் உருவாகும் .

குழந்தை செல்வம்

கோவிலில் மணி ஓசை கேட்பது போல்,

 கனவு கண்டாள் ,

குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு,

 மழலை பிறக்கும் வாய்ப்பு உருவாகும் .

இறைவனை வழிபடுவது ,

ஆலயத்தினுள் நுழைந்து,

இறைவனை வழிபடுவது ,

போல் கனவு கண்டாள்,

நீங்கள் மேற்கொண்ட காரியத்தில்,

 இருந்த தடைகள்,

அகலப் போகிறது என்பது பொருள் , 

அது தெய்வத்தின் ,

அருளால் நன்மையாகவே ,

அமையும் என்று கருதலாம் .

ஆடி மாதத்தில் வரும்

ஆடி மாதத்தில் வரும் ,

அமாவாசை தினத்தன்று,

 கடல் அல்லது நதிகளில் நீராடி,

 முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ,

பெரும் புண்ணியத்தைத் தரும் .

குத்துவிளக்கு பூஜைசெய்து ,

ஆடி  மாதம் செவ்வாய் ,

வெள்ளி , கிழமைகளில் ,

குத்துவிளக்கு பூஜைசெய்து ,

சுமங்கலிப் பெண்களுக்கு ,

 ரவிக்கை துணி, வெற்றிலை பாக்கு,

 தேங்காய் வைத்து கொடுப்பது,

 நல்ல பலனை தரும் .







Saturday, 6 July 2013

இரண்டு கால்களையும்

இரண்டு கால்களையும் ,

ஒன்றுடன் ஒன்று சேர்த்து,

 தேய்த்து கழுவக் கூடாது .

தோஷம் இல்லை

வில்வம், துளசி, 

பழையதாயினும் தோஷம் இல்லை , 

வாடினாலும் தோஷம் இல்லை,

அசுத்தமான புஷ்பங்கள்

அசுத்தமான புஷ்பங்கள் , 

வாடிய மலர்கள், 

பழைய புஷ்பங்கள், 

வாசனை அற்ற  மலர்கள் ,

இறவன் பூஜைக்கு ஏற்றதல்ல .

அக்னி வளர்த்து

புகையிலை ஓமம் செய்யக் கூடாது , 

நன்கு அக்னி  வளர்த்து,

 ஓமம் செய்ய வேண்டும் .

அக்கினியில்

அக்கினியில் அசுத்த வஸ்துவை போடக் கூடாது .

இவற்றால் அக்கினியை

துணி, இலை , கை முறம்,

வாய், பனைவிசிறி,

இவற்றால் அக்கினியை ,

ஜ்வாலிக்க செய்யக் கூடாது .

பனை ஓலையால் செய்யப்பட்ட

பனை ஓலையால் செய்யப்பட்ட ஆசனத்தை,

 ஒரு போதும் ஜபம், ஓமம், 

போஜனம் செய்யும்போது,

 பயன் படுத்த கூடாது .

மனிதனுக்கு ஆயுள்,

மனிதனுக்கு ஆயுள்,  செல்வம், ,

 மோட்சம் ஆகியவை , 

விபூதி பூசுவதால் கிடைக்கிறது .

விபூதி, குங்க்குமங்களை ,

விபூதி, குங்க்குமங்களை , ,

சூலம், சாத்திரன் போன்ற வடிவங்களில் ,

நெற்றியில் பூசுவது கூடாது .

பட்டு, கம்பளம் போன்ற

பட்டு, கம்பளம் போன்ற ஆடைகள் ,

அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்களில் மட்டும், 

நீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும் .

நமஸ்காரம் செய்யும்போது

நமஸ்காரம் செய்யும்போது , 

விநாயகர், பார்வதி , சிவன், ஆகியோருக்கு 3 தடவை, 

விஷ்ணுவுக்கு 4 தடவை, 

சன்யாசிக்கு 4 தடவை , 

மனிதர்களுக்கு 1 தடவை , 

 நமஸ்காரம் செய்யவும் .

சுவாமியின் பீடத்திற்கு

சுவாமியின் பீடத்திற்கு சமமாக,

 நமது ஆசனம் இருக்ககூடாது , 

அதைவிட உயரமாகவும் இருக்ககூடாது ,

தாழ்வாக இருக்க வேண்டும் .

இறைவன் பூஜைக்கு

இறைவன் பூஜைக்கு உரிய பூக்களை ,

நீரில் கழுவுதல் கூடாது,

 ஜலம் தெளிக்கவும் .

ரட்ஷயை வலது கையில்

ரட்ஷயை வலது கையில் அணியலாம் , 

அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம் , 

ஒரு போதும் அருணா கயிற்றில் ,அணியக்கூடாது ,

 பூனுலிலும் கட்டிக் கொள்ளக்கூடாது .

Friday, 5 July 2013

பெண்கள் விரதம்

பெண்கள் விரதம் அனுஷ்டித்தல் ,

பட்டினி கிடத்தல் ,

இவை தர்மமாகாது, 

கணவனுக்கு பணிவிடை செய்வதுதான் ,

உத்தமமான தர்மம் ஆகும்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி  பெண்கள் மாலை நேரத்தில் ,

சாப்பிடக் கூடாது , 

குளிக்கக்கூடாது, 

மரத்தடி பக்கம் போகக் கூடாது .

காட்டில் உண்டான புஷ்பங்களினாலும்

காட்டில் உண்டான புஷ்பங்களினாலும், 

வில்வம் முதலிய பத்ரங்களினாலும் ,

தன் தோட்டத்தில் விளைந்த புஷ்பங்களாலும் ,

பரமேஸ்வரனை பூஜை செய்ய .வேண்டும்

சன்யாசிக்கு தங்கத்தையும்,

சன்யாசிக்கு தங்கத்தையும்,

பிரம்மசாரிக்கு அரிசியும், 

கிருஹஸ்தனுக்கு அன்னத்தையும் 

கொடுப்பவன் கஷ்டப்படுவான் .

பரமேஸ்வரனுக்கு நெய்

பரமேஸ்வரனுக்கு நெய் அபிஷேகம் செய்வது ,

ஆயிரம் கோடி கல்பகாலங்களில் ,

சேகரித்த பாபங்களை போக்குகிறது .

Thursday, 4 July 2013

காலமே சிறந்த ஆசிரியர் ,

இதயமே சிறந்த உபதேசியார் ,

காலமே சிறந்த ஆசிரியர் ,

உலகமே சிறந்த புத்தகம் ,

கடவுளே சிறந்த நண்பர் .

 


பிரார்த்தனை

பிரார்த்தனை துன்பங்களை விழுங்கிவிடும் .

உயர்ந்த மனசாட்சி

தூய சிந்தனை , உயர்ந்த மனசாட்சி , ,

உள்ளவர் இதயத்தில் இருப்பதே இறைவன் , 

அவரை தேட வேண்டிய அவசியம்மில்லை .

நம்மைக் கருவியாகக்

கடவுள் தான் தனது ,

வேலையை செய்து முடிப்பதற்கு,

 நம்மைக் கருவியாகக் கொண்டிருக்கிறார்,

 பிறகு நாம் செய்கிறோம் என்பது ஏது .

பிறருக்கு உதவி செய்வதும்

கடவுள் வழிபாடும் ,

 பிறருக்கு உதவி செய்வதும் , 

ஒரு நாணயத்தின்,

 இரு பக்கங்கள் ஆகும் .

அகங்காரம் என்பதோ ,

ஆனால் அகங்காரம் என்பதோ ,

விருப்பங்களை திருப்தி செய்கிற முயற்சி .

மோட்சம் என்கிற நிலை

மோட்சம்  என்கிற நிலை ,

விருப்பங்களை விடுவதாகும் ,

பத்தினிக்கு

பல்வேறு சமூகத்தை சேர்ந்தவருக்கும்,

கடவுள் குரு ,

பத்தினிக்கு , கணவன் குரு .

கணவனின் இதயத்துக்கு,

கணவனின் இதயத்துக்கு,

மகிழ்ச்சி அளிப்பவளே, 

உண்மையான மனைவி .

செல்வம் தர்மத்தைக்

செல்வம் தர்மத்தைக் காக்கிறது, 

யோகம் அறிவைக் காக்கிறது,

மரியாதை தாய் தந்தை பேரை காக்கிறது,

நல்ல பெண் குடும்பத்தை காக்கிறாள் .

விதிதான் அரசனை

விதிதான் அரசனை ஆண்டியாக்குகிறது, 

ஆண்டியை அரசனாக்குகிறது .

ஒருவனுடைய ஆயுள்

ஒருவனுடைய ஆயுள், ,

கல்வி, தொழில், செல்வநிலை, யாவும்,

 அவன் கருவில் இருக்கும்போதே,

 விதிக்கபட்டவையாகும் .


தங்கள் இதயத்தில்,

மதி நுட்பம் உடையவர்கள் ,

தங்கள் இதயத்தில்,

 கடவுளைக காண்கிறார்கள் .

அமாவாசை சிரார்த்தம்

அமாவாசை சிரார்த்தம் ,

மிக விசேஷமானது ,

அதனால் இம்மை மறுமை,

 இன்பங்கள் உண்டாகும் .

முப்பாட்டன்

பிதுர்க்கள் , வசுதேவதைகளே ஆவார், 

பாட்டன் ...ருத்ர தேவதை ஆவார், 

முப்பாட்டன் ....ஆதித்ய தேவதை ஆவார், 

சிரார்த்தம் செய்தவன் ,

அதில் மிகுந்த  உணவையே ,

உண்ண வேண்டும் .

தொழிலில்

விதிப்படி தனக்கு அமைந்த தொழிலில் ,

ஈடுபட்டு திருப்தியாக,

 ஒரு  மனிதன் வாழ வேண்டும் .

ஞானிகள்

இறைவனை வாயாரச் சொல்வதில் தங்கள் வாக்கையும், 

மூச்சை அடக்கி இறைவனிடம் இறைநிலை ,

நாடுவதில் தங்கள் பிராணனை-யும் ,

ஈடுபடுத்திய ஞானிகள் பலர் உண்டு .

வழியில் காணும்

வழியில் காணும் மண்மேடு, ,

பசு, தெய்வம், அந்தணர், நெய்க்குடம், 

தேன் குடம், நாற்சந்தி, அரசமரம், 

இவற்றை வலம் செய்து செல்ல வேண்டும் .

உதயசூரியன்

உதயசூரியன், அஸ்தமன சூரியன்,

 கிரகண சூரியன், நீரில் சூரிய பிரம்பம், 

உச்சி வேலை சூரியன், 

இவற்றை ஒருவன் பார்க்கக் கூடாது,

அழைக்காமல்

அழைக்காமல் ,

வேள்வி சாலைகளில் புகக் கூடாது .

சூரிய உதயம்

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ,

இவற்றில் உண்ணக் கூடாது .


Wednesday, 3 July 2013

பூ மாலைகள்

கோயில்களில் விக்கிரகங்களுக்கு,

 அணிவிக்கப்பட்ட பூ மாலைகள், 

வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு,

 அணிவிக்கக் கூடாது .

மார்கழி மாதத்தில்

மார்கழி மாதத்தில்,

 தேய்பிறை அஷ்டமி, நவமிகளில் ,

பிதுர்களின் காரணமாக ,

அஷ்டகா, அச்வச்டகா, ,

சிரார்த்தம் செய்தால் நன்மை,

பெளர்ணமி

துன்பங்களை நீக்க ,

பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ,

சாவித்ரி ஹோமம், சாந்தி ஹோமம், ,

செய்தால் நன்மை .

ஒழுக்கங்களை

ஒருவன் யாகங்கள்,

 செய்யாவிட்டாலும் பரவாயில்லை ,

ஒழுக்கங்களை எக்காலத்தும் ,

விட்டுவிடக் கூடாது .

சாதுக்களின்

சாதுக்களின்  மீது,

 இல்லாத குற்றங்களை சுமத்துவது , 

 கெட்ட காலம் வந்து விட்டது ,

என்பது திண்ணம் .


சம்சார ப்ந்த்தத்தில்,

நீர் நிலையில் முழ்கி எழுந்திருப்பதுபோல,

 சம்சார ப்ந்த்தத்தில்,

 காம வினையால் அவதிபடுகிறான் .

முன்வினையானது

முன்வினையானது எந்தெந்த,

 உடம்போடு என்ன செய்தானோ , 

அதன் பலனை அந்தந்த,

 உடம்போடு அனுபவிக்கிறான், 

பகவானுக்கு

பகவானுக்கு நைவேத்யம் என்பதற்கு ,

சட்டதிட்ட்மே கிடையாது , 

உன்னிடம் என்ன இருக்கிறது ,

என்பதுதான் முக்கியம் .

உடல் ஒரு கோயில்,

உடல் ஒரு கோயில், 

அதில் கடவுள் வீற்றிருக்கிறார் , 

அதை எப்போதும் ,

தூய்மையோடு வைத்திருக்க வேண்டும் .

துவாதசி

துவாதசி விரதத்தைக் காட்டிலும் ,

சிறந்த விரதம்  இல்லை .

காயத்திரி மந்திரத்தை விடச்,

 சிறந்த மந்திரம் இல்லை .

கடவுளைக் காண்பாய் .

குழந்தையிடம் தாயின் பாசம் , 

கணவனிடம் மனைவியின் காதல் , 

பணத்திடம் கருமியின் பற்று , 

இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற ,

அன்பை உன்னால் கடவுளிடம் செலுத்த முடியுமானால் , 

அந்த கணமே நீ கடவுளைக் காண்பாய் .

கர்த்தருடைய வேதம்

கர்த்தருடைய வேதம் குறைவற்றது ,

ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாயிருக்கிறது . 

கர்த்தருடைய சாட்சி சத்தியமும் ,

 பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது .

சிவபெருமானை வணங்குவது,

சிவபெருமானை வணங்குவது,,

 கடவுளை வழிபடுவது , 

தியானம் செய்வது, 

தவம் செய்கிறவர்களுக்கு,

 முனிவர்களுக்கு,

 ஞானிகளுக்கு ,

ரிஷிகளுக்கு சிறப்பு .

நல்ல மனுஷனுடைய

நல்ல மனுஷனுடைய  நடைகள் கர்த்தரால் உறுதிப்படும் ,

அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் .

சூரியனை ஆந்தையால்

முழு  உலகத்திற்கும் ஒழி தரும் சூரியனை,

 ஆந்தையால் காண முடியவில்லை என்றால்,

 அது சூரியனது குற்றம் கிடையாது ,

அந்த பறவையின் பார்வையில் உள்ள குற்றமே ,

அதேபோல் கடவுளை,

  அருளை பற்றி புரியாத்தது   அறியாமையே .

மெளனம் ,

தெய்வீக அருளின் மிக உயர்ந்த  வடிவம் மெளனம் ,

அதுவே மிகவும் உயர்ந்த உபதேசமும் கூட .

Tuesday, 2 July 2013

கடவள் குடி இருப்பார் .

மன்னிக்கும் குணம் உள்ளவனிடம் ,

பொறுமை உள்ளவனிடம் ,

கடவள் குடி இருப்பார் .

கடவுளை வணங்கினால்

ஆற்றில் குளித்தால் நன்மை,

 ஆற்றுக்கு அல்ல  அதுபோல்,

 கடவுளை வணங்கினால் நன்மை,

 கடவுளுக்கு அல்ல நமக்கு தான் .

ஆற்றில் நாம் குளிக்கா விட்டால்

ஆற்றில் நாம் குளிக்கா விட்டால் ,

ஆறு நம்மைக் கோபிக்காது,

 அதில் குளித்தால் தான்,

 நமக்கு சுகம் அது போல் , 

கடவுளை நாம் ,

வணங்கினால் தான் இன்பம் வரும் .

நாம் விரும்புகிற அனைத்தையும் ,

நாம் விரும்புகிற அனைத்தையும் ,

நிச்சியம் நமக்கு அருள் செய்வார் ,

என்ற நம்பிக்கை ,

பூரனமாக ஏற்படும் போது , 

நம்மை அவரிடம் ,

முழுமையாக ஒப்படைப்போம் .